நேத்தபாக்கம் கிராமத்தில் கலையரங்கத்தை திறந்துவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.  
திருவண்ணாமலை

புதிய கலையரங்கங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

ஆரணியை அடுத்த நேத்தபாக்கம், சதுப்பேரிபாளையம் கிராமங்களில் தலா ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலையரங்கங்களை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆரணியை அடுத்த நேத்தபாக்கம், சதுப்பேரிபாளையம் கிராமங்களில் தலா ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலையரங்கங்களை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

நேத்தபாக்கம், சதுப்பேரிபாளையம் கிராமங்களில் கலையரங்கம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனா். இதன் பேரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.8 லட்சம் ஒதுக்கி கலையரங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், கலையரங்கங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்வுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, கலையரங்கங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் என்.வாசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் கவிதா பாபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கிளைச் செயலா் ஞானப்பிரகாசம் செய்திருந்தாா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT