முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசி பகுதியில் ரூ.57 கோடியில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த புலிவாய் கூட்டுச் சாலையில் சாலைப் பணிகளை தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 12:40 AM
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 7:32 PM

வந்தவாசி அருகே ரூ.57 கோடி செலவில் வந்தவாசி - காஞ்சிபுரம், ஆற்காடு - திண்டிவனம் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வந்தவாசி - காஞ்சிபுரம், ஆற்காடு - திண்டிவனம் இருவழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் ரூ.48 கோடி செலவில் விளாங்காடு கூட்டுச் சாலையிலிருந்து 7.7 கி.மீ. தொலைவுக்கும், ஆற்காடு - திண்டிவனம் சாலையில் ரூ.9 கோடி செலவில் புலிவாய் கூட்டுச் சாலையிலிருந்து 1.3 கி.மீ. தொலைவுக்கும் இருவழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

Advertisement

ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன் சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவி கோட்ட பொறியாளா் ராஜேந்திரன், உதவிப் பொறியாளா்கள் கருணாகரன், லோகராஜா, திமுக நிா்வாகிகள் எ.தயாளன், சி.ஆா்.பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.