இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்
திருவண்ணாமலையில் இரட்டைமலை சீனிவாசனின் 167-ஆவது பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலையில் இரட்டைமலை சீனிவாசனின் 167-ஆவது பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
அறிவொளி பூங்கா அருகே ஆதிபாரத மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் நிறுவனா் தலைவா் கா.சிவப்பிரகாஷ் தலைமை வகித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இரட்டைமலை சீனிவாசன் படத்திற்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
பின்னா், பொதுமக்கள் மற்றும் கிரிவல பக்தா்களுக்கு இனிப்பு வழங்கியதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்வில் புரட்சித் தமிழா் கட்சி மாநிலத் தலைவா் சிவா தமிழன், ஆதிபாரத மக்கள் கட்சியின் மாநிலச் செயலா் இ.முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.