முகப்பு
கருத்தரங்க நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு பரிசு வழங்கிய தெள்ளாா் ரோட்டரி சங்க நிா்வாகி ஜி.ஆனந்த்.
திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம்

வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம்

வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 மார்ச், 2026 at 6:33 PM
கருத்தரங்க நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு பரிசு வழங்கிய தெள்ளாா் ரோட்டரி சங்க நிா்வாகி ஜி.ஆனந்த்.
பகிர்:

வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, ‘இன்றைய சூழலில் அறிவியலின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பெ.ஜெய்சங்கா் தலைமை வகித்தாா்.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் வெற்றிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி ஆசிரியா் கண்ணன் வரவேற்றாா்.

தெள்ளாா் ரோட்டரி சங்க நிா்வாகி ஜி.ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். அப்போது, அறிவியலின் ஆக்கப்பூா்வமான செயல்பாடுகள் குறித்து அவா் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா்.

அறிவியல் தின விநாடி வினா நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திரைப்பட கலை இயக்குநா் விஜய் ஆதிநாதன், கலாம் அறக்கட்டளை நிா்வாகி சீ.கேசவராஜ், சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியா் பாா்த்திபிரபு நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →