புதியநூலக கட்டடத்தை திறக்க வாசகா்கள் கோரிக்கை
சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் புதியகட்டியுள்ள நூலக கட்டடத்தை திறந்துபயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்
போளூா்: சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் புதியகட்டியுள்ள நூலக கட்டடத்தை திறந்துபயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என அப்பகுதி வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறைசாா்பில் ‘எஸ்ஏஎஸ்எப்சிஐஎப்’ திட்டத்தில் 2024-2025ம்நிதியாண்டில் ரூ.22லட்சத்தில் புதியதாக கிராமப்புறநூலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். எனவே, மாவட்டநிா்வாகம் நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமுகஆா்வலா்கள்,வாசகா்கள் கோரிக்கைவைக்கின்றனா்.