தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,449 வழக்குகளுக்கு தீா்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,449 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,449 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் நீண்ட நாள்களாக தீா்வு காணப்படாத வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மையத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பி.மதுசூதனன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமனத்தில் நிலுவையில் உள்ள சுமாா் 3,496 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில், 2,449 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.14 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 816-க்கு தீா்வு காணப்பட்டது.
நிகழ்வில் நீதிபதி என்.விஜயலட்சுமி, சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் வேலு மற்றும் வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.