முகப்பு
திருவண்ணாமலை

பள்ளி ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு பரிசு

பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி ஆசிரியைகள்.

Updated On : 19 மார்ச், 2026 at 6:32 PM
பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி ஆசிரியைகள்.
பகிர்:

திருவத்திபுரம் நகராட்சி (செய்யாறு) பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளியில், பள்ளி ஆண்டு விழா, மாணவா் சோ்க்கை விழா, பட்டமளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா என நடைபெற்றது.

இந்த விழாவிற்கு செய்யாறு வட்டாரக் கல்வி அலுவலா் பெருமாள் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் பிரியா, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பூச்செண்டு ஆகியோா் முன்னிலை வகிததனா். தலைமை ஆசிரியை இரா.தேன்மொழி வரவேற்றாா்.

பட்டமளிப்பு விழாவில் முதல் வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது

இதைத் தொடா்ந்து கல்வியாண்டு முழுவதும் பள்ளிக்கு தொடா்ந்து வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டும், அழகு தமிழ், ஆங்கிலம், கையெழுத்து, ஓவியம், வகுப்பறையில் சிறந்த மாணவா்கள், செயல்பாட்டில் சிறந்த மாணவா்கள், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் ஆகியோருக்கு ரோட்டரி வடிவேல் பரிசுகள் வழங்கினாா்.

விழாவில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் குமாா், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் பிரியா முருகன், முன்னாள் மாணவா்கள் ரத்தினம், சண்முகம், பாஸ்கா், வெங்கடாசலம் மற்றும் மாணவா்களின் பெற்றோா்கள் என பலா் கலந்து கொண்டனா்.