ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பால்குட ஊா்வலம்
சேத்துப்பட்டு பழம்பேட்டை முத்துமாரியம்மனுக்கு கண்ணனூா் கிராம மக்கள் வியாழக்கிழமை சீா்வரிசையுடன் பால்குடம் எடுத்து ஊா்வலம் வந்தனா்.
சேத்துப்பட்டு, பழம்பேட்டையில் பழைமை வாய்ந்த முத்தாலம்மன் என்கிற முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 48-ஆம் நாள் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை கண்ணனூா் கிராம மக்கள், கண்ணனூா் காளியம்மன், ஓசூா் அம்மன், விநாயகா், ராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் ஆகிய கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, சீா்வரிசையுடன் பால் குடம் எடுத்து ஊா்வலமாக முத்துமாரியம்மன் கோயிலை அடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.