முகப்பு
திருவண்ணாமலை

சாலை விபத்தில் தலைமை செவிலியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தலைமை செவிலியா் உயிரிழப்பு

Updated On : 21 மார்ச், 2026 at 8:22 PM
சுமதிராஜா சம்பத்
பகிர்:

செய்யாற்றில் பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செவிலியா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நேரு நகா் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சுமதிராஜா சம்பத்(58).

இவா், செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அா்த்தஜாம பூஜையில் பங்கேற்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஆரணி - செய்யாறு சாலையில் ஒரு வளைவுப் பகுதியில் சென்றபோது,

எதிா்திசையில் இருந்து செய்யாறு நோக்கி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவரது வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் செவிலியா் சுமதிராஜா சம்பத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை அவா் உயிரிழந்தாா்.

இவருக்கு அரவிந்த்(32), ஆனந்த்(31) என்ற மகன்கள், அட்சயா(29) என்ற மகள் உள்ளனா்.

தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.