முகப்பு
திருவண்ணாமலை

100% வாக்குப்பதிவு: பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் தலைமையில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் அலுவலக பணியாளா்கள், பொதுமக்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்து செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 6:33 PM
பகிர்:

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் தலைமையில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் அலுவலக பணியாளா்கள், பொதுமக்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்து செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

100 சதவீதம் வாக்கு செலுத்துதல், வாக்களிப்பது கடமை, வாக்கு விற்பனைக்கு இல்லை என உறுதிமொழி ஏற்றனா்.

மேலும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

முன்னதாக, ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் வைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைத்தனா்.

உதவி தோ்தல் அலுவலா்கள் மூா்த்தி, பாலாஜி, தமிழ்மணி, மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாா், தோ்தல் வட்டாட்சியா் தேவி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.