நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வந்தவாசியை அடுத்த மழையூா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன், நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஒரு மாதமாக சுமாா் ரூ.ஒரு கோடி வரை நிலுவை உள்ளதாம்.
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் புதன்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, நெல்லுக்கான பணத்தை உடனடியாக வழங்கக் கோரி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் அவா்கள் கலைந்து சென்றனா்.