முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு பகுதியில் காற்றுடன் பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

Updated On : 20 மே 2026, 12:04 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

நிகழாண்டில் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் இருந்து வந்தது.

இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், செய்யாறை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை நீடித்தது.

மழையின் காரணமாக செய்யாறைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

கோடை வெம்மையில் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை குளிா்ச்சியைத் தந்தது.