வேலூர்

ஐஏஎஸ் அதிகாரி செல்லிடப்பேசிக்கு ஆபாச படம்: போலீஸார் விசாரணை

DIN

ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரின் செல்லிடப்பேசி எண்ணின் கட்செவி அஞ்சலுக்கு ஆபாசபடம் அனுப்பிய மர்ம நபர் குறித்து ஏலகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை குறளகத்தில், ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக பணியாற்றி வருபவர் உமாசங்கர். இவர், பணி நிமித்தமாக திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஏலகிரி மலைக்கு வந்து, அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். இவரது கட்செவி அஞ்சலுக்கு ஒரு குறிப்பிட்ட செல்லிடப்பேசி எண்ணிலிருந்து 20-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள் வந்ததாகத் தெரிகிறது. அவற்றை அனுப்பிய அந்த மர்ம நபர் பின்பு, குரூப்பிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.  
இதையடுத்து, ஆபாச படங்களை வெளியிட்டது குறித்து விசாரிக்க வேண்டும் என ஏலகிரி காவல் நிலையத்தில் உமாசங்கர் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT