வேலூர்

ஆழ்துளைக் கிணறு, மின்விசைப் பம்பு திறப்பு

DIN

திருப்பத்தூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, மின்விசைப் பம்பை எம்எல்ஏ நல்லதம்பி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட குள்ளாச்சாரி வட்டத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை இருந்து வந்தது. இதுகுறித்து எம்எல்ஏ நல்லதம்பியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதுபற்றி, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, நகராட்சி சிறப்பு நிதிமூலம் புதிய ஆழ்துளைக் கிணறு, மின்விசைப் பம்பு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  அதன்படி, பணிகள் நிறைவடைந்து, அதனை எம்எல்ஏ நல்லதம்பி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT