வேலூர்

ஆற்காடு அருகே பொதுமக்கள் சாலை மறியல்

DIN

ஆற்காடு அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆற்காடு வட்டம், திமிரியை அடுத்த புங்கனூர் கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திமிரி-வேலூர் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பேருந்து மற்றும் லாரியை சிறை பிடித்தனர்.
தகவலறிந்த ஆற்காடு வட்டாட்சியர் சரவணன்,  திமிரி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீஸார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல்
கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT