வேலூர்

396 மாணவியருக்கு இலவச மிதிவண்டிகள்

DIN


பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மேல்பட்டி, அழிஞ்சிகுப்பம், தேவலாபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 396 மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மேல்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் டி. பிரபாகரன் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கஜேந்திரன் வரவேற்றார். தமிழக வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேர்ணாம்பட்டு நகர அதிமுக செயலர் எல்.சீனிவாசன், ஒன்றியச் செயலர் சி. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT