ஆற்காட்டில் சுவர்ண லட்சுமி கரிக்கோல ஊர்வலம்
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சுவர்ண லட்சுமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சுவர்ண லட்சுமி கரிக்கோல ஊர்வலத்துக்கு ஆற்காட்டில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சுவர்ண லட்சுமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சுவர்ண லட்சுமி கரிக்கோல ஊர்வலத்துக்கு ஆற்காட்டில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆற்காடு பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன் தலைமையில் அம்மன் கரிக்கோல ஊர்வலத்துக்கு வரவேற்பு அளித்து சிறப்பு பூஜை செய்தனர்.
இதில், தொழிலதிபர் கண்ணன், சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் தரணிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.