முகப்பு
வேலூர்

ரயிலில் அடிபட்டு பெண் சாவு

காட்பாடி அருகே தண்டவாளத்தைத் கடக்க முயன்ற பெண் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 5:32 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

காட்பாடி அருகே தண்டவாளத்தைத் கடக்க முயன்ற பெண் ரயிலில் அடிபட்டு இறந்தார்.
காட்பாடியை அடுத்த முடினாம்பட்டு பகுதியைச் சேர்ந்த தண்டபாணியின் மனைவி ஜானகி (39). தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை விரிஞ்சிபுரம்-
காவனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் ஜானகி நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் அங்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.