வேலூர்

சிஐஎஸ்எஃப் வளாக கணினி அறையில் தீ விபத்து

DIN

அரக்கோணம் அருகே உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அலுவலக வளாகத்தில் உள்ள கண்னி பிரிவில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த கணினிகள் மற்றும் குளிர்சாதனக் கருவிகள் தீயில் எரிந்து நாசமாயின.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே நகரிகுப்பத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டலப் பயிற்சி மையம் உள்ளது. இம்மையத்தின் கணினிக் கட்டுப்பாட்டு அறையில் வியாழக்கிழமை மதியம் சுமார் 2.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த மின்சாதனங்கள் எரியத் தொடங்கியதும், பணியில் இருந்த அலுவலர்கள் அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். அரக்கோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அரை மணி நேரமாகியும் வராததால் சிஐஎஸ்எஃப் படை வீரர்களே தீயை அணைத்தனர். 
இதில், அலுவலகக் கணினிகள் மற்றும் குளிர்சாதனப் பொருள்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. மின் கோளாறே இவ்விபத்துக்கு காரணம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT