வேலூர்

கல்குவாரி குட்டையில் மூழ்கிய தொழிலாளி சடலமாக மீட்பு

DIN

வேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார்.
ஆற்காடு முப்பதுவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (42).  தொழிலாளியான இவர், அரியூரை அடுத்த ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குவாரிக்கு  சிலருடன் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக குமார், குவாரியில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து இரு நாள்களாக தேடியும் கிடைக்கவில்லை. 
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் குமாரின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து, அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அரியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT