வேலூர்

தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது

DIN

வாணியம்பாடி: பெட்ரோல் போட்டதற்கு பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுப்பட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி கோணாமேடு அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் அதே பகுதியைச் சோ்ந்த சூா்யா(27) சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டாா். அதற்கு நிலைய உரிமையாளா் தூயவன் பணம் கேட்டாா்.

எனினும், பணம் தர மறுத்து சூா்யா தகராறில் ஈடுபட்டாா். இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் தூயவன் புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் சந்திரசேகா் வழக்குப் பதிவு செய்து, சூா்யாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT