வேலூர்

தன்வந்திரி பீடத்தில் சஞ்சீவினி திருமஞ்சனம்

DIN

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஏகாதசி திதியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை பிணி தீர்க்கும் தன்வந்திரி பெருமாளுக்கு சகல விதமான நோய்களைத் தீர்க்கும் அமிர்த சஞ்சீவினி யாக விளங்கும் நெல்லிக்காய் பொடி தீர்தத்தைக் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெற்றது .
உலக மக்களஅனைவரும் சிறுநீரகக் கோளாறு, ரத்த சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரணக் கோளாறுகள், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றில் இருந்து குணமடையவும், அனைவரும் ஆரோக்கியத்துடன் செல்வ வளம் பெற்று ஆனந்தமாக வாழவும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெற்ற மகா தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. மேலும் நெல்லிப்பொடி திருமஞ்சனமும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோமப் பிரசாதங்களுடன் நெல்லிப்பொடி தீர்த்தப் பிரசாதமும் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT