வேலூரில் நடைபெறுவதாக இருந்த கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு, விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் பிப். 23 முதல் 27-ஆம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணம் கருதி நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நேர்காணல் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.