வேலூர்

வீடு புகுந்து 11 பவுன் நகை திருட்டு

DIN


நாட்டறம்பள்ளி அருகே வீடு புகுந்து 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தொட்டிக்கிணறு கூடுபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜமுனா(38). ஆடு மேய்க்கும் தொழிலாளி. அவர் சனிக்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு வீட்டின் வெளியே மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். 
பிற்பகல் 2 மணிக்கு வீடு திரும்பிய ஜமுனா, வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். ஜமுனா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT