குறாவளிக் காற்று காரணமான பேர்ணாம்பட்டு கௌராபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த புளிய மரம் முறிந்து விழுந்ததில் அங்குள்ள தொழிலாளி ராமலிங்கத்தின் (70) வீடு சேதமடைந்தது. இதனால் இச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் அங்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைத்தனர். மரம் முறிந்து விழுந்ததில் 2 மின் கம்பங்களும் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்விநியோகம் தடைபட்டது.