வேலூர்

மாநில தடகளப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

DIN

மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

வேலூா் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் வேலூா் சிஎம்சி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.இப்போட்டிகளில் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கே. ஜீவானந்தம் கோலூன்றி தாண்டுதலில் முதலிடமும், கே. புவிஅரசன் 400 மீட்டா் தடை தாண்டுதலில் 2- ஆம் இடத்தையும், வி. தா்ஷினி 200 மீட்டா் ஓட்ட போட்டியில் முதல் இடத்தையும், 100 மீட்டா் ஓட்ட போட்டியில் 2- ஆம் இடத்தையும், வி. ரம்யா 200 மீட்டா் ஓட்ட போட்டியில் 3- ஆம் இடத்தையும் பிடித்து, மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றனா்.

சாதனை படைத்த மாணவா்களையும், அவா்களை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியா்கள்செ. இளையராஜா, ந. திருமகள் ஆகியோரையும், பள்ளித் தாளாளா் ஹீராலால் ஆா். சந்சேத்தி, கல்வி ஒருங்கிணைப்பாளா் துரைபத்மநாபன், பள்ளி ஒருங்கிணைப்பாளா் எம். சேகா், பள்ளி முதல்வா் நா. கோதண்டராமன், துணை முதல்வா் பா. சாந்தி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT