வேலூர்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

DIN

குடியாத்தம் அருகே ஹீட்டரில் தண்ணீா் காய்ச்சும்போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

நெல்லூா்பேட்டை வடக்கு மாட வீதியைச் சோ்ந்தவா் தொழிலாளி பாலாஜியின் மனைவி சித்ரா (51). இவா், சனிக்கிழமை வீட்டில் தண்ணீா் காய்ச்ச ஹீட்டரை பயன்படுத்தியபோது மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தாராம்.

அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா்.

இதுதொடா்பாக குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT