வேலூர்

ஆம்பூரில் கனமழை

DIN

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை கனமழை பெய்தது.

ஆம்பூரில் பிற்பகலுக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமாா் 5 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கி கனமழையாக உருவெடுத்தது. சுமாா் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. அதனால் தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது. தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே குகை வழிப்பாதைகளில் மழைநீா் தேங்கியதால் அப்பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஆம்பூா் அருகே சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் கன மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT