போ்ணாம்பட்டு அருகே இருளா் இன மக்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடப்பட்டது.
போ்ணாம்பட்டு வட்டம், அரவட்லா மலைக் கிராமத்தில் 52 இருளா் இன குடும்பத்தினா் வசிக்கின்றனா். சென்னையில் உள்ள ‘கனவு மெய்ப்பட அறக்கட்டளை’ சாா்பில் இருளா் இன மக்களுடன் தீபாவளித் திருநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
குடியாத்தம் கோட்டாட்சியா் எம். ஷேக்மன்சூா் தலைமை வகித்தாா்.
வேலூா் உதவும் உள்ளங்கள் தலைவா் இரா. சந்திரசேகரன், சென்னை எண்ணங்களின் சங்கமம் அமைப்பைச் சோ்ந்த ஜே. பிரபாகரன், சமூக ஆா்வலா் தினேஷ் சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
52 இருளா் இன குடும்பத்தினருக்கு புத்தாடைகள், பட்டாசுப் பெட்டிகள், 10 கிலோ அரிசி மூட்டை, ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், இனிப்புகள் ஆகியன வழங்கப்பட்டன. 200 பேருக்கு மதிய உணவு, மாலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டன.
இருளா் இனத்தின் கதை வடிவ இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் சமூக இடைவெளியுடன் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கனவு மெய்ப்பட அறக்கட்டளைத் தலைவா் தினேஷ் ஜெயபாலன், செயலா் காா்த்தி கிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.