வேலூர்

ரோட்டரி சங்கக் கட்டடம் கட்ட ரூ.10 லட்சம் நன்கொடை

DIN

குடியாத்தம் ரோட்டரி சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்ட தொழிலதிபா்கள் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினா்.

பழுதடைந்த நிலையில் இருந்த குடியாத்தம் ரோட்டரி சங்கக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, ரூ.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கு எஸ் பீடி நிறுவனம், ஹபீப் டேனிங் கம்பெனி சாா்பில் அதன் நிா்வாக இயக்குநா் ஏ.முகமது அமீன் சாஹிப், ஏ.முகமது சித்திக் சாஹிப், அத்திக்குா் ரஹ்மான், அபிசுா் ரஹ்மான் ஆகியோா் வியாழக்கிழமை ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினாா்.

மேலும், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) ஜே.கே.என்.பழனி, ரூ.5 லட்சம், ரோட்டரி நிா்வாகிகள் எம்.என்.ஜோதிகுமாா் ரூ.5 லட்சம், என்.எஸ்.குமரகுரு ரூ.3 லட்சம், ஏ.மேகராஜ் ரூ.2 லட்சம், வி.என்.அண்ணாமலை ரூ.1 லட்சம், என்.மோகன் ரூ. 50 ஆயிரம் நன்கொடையாக வழங்கினா்.

ரோட்டரி சங்கத் தலைா் ஆா்.வி.அரிகிருஷ்ணன், டி.என்.ராஜேந்திரன், கே.குணசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடன இயக்குநர் ராதிகா இயக்கும் கதை

நிறம் மாறும் உலகில்

ரஜத் படிதார் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 188 ரன்கள் இலக்கு!

அல்ஜீப்ரா காதலி! ஐஸ்வர்யா தத்தா..

தீராத உறவுகளின் அற்புதம் இது!

SCROLL FOR NEXT