வேலூர்

வேலூரில் இருந்து சென்னைக்கு இரவு 7 மணியுடன் பேருந்து நிறுத்தம்

DIN

வேலூா்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலூரில் இருந்து சென்னைக்கு இரவு 7 மணியுடன் பேருந்து சேவை நிறுத்தப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதேபோல், திருச்சி, கும்பகோணம் மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மதியம் 2.30 மணிக்குப் பிறகு இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் மறுஉத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வேலூா் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவத ற்கான நேரம் வரைமுறை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, தாம்பரம் ஆகிய ஊா்களுக்கு இரவு 7 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். திருத்தணி, காஞ்சிபுரத்துக்கு இரவு 8 மணி வரை இயக்கப்படும்.

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு மாலை 4 மணி வரையும், ஒசூருக்கு மாலை 5.30 மணி வரையும், சேலம் பேருந்துகள் மாலை 4 மணி வரையும், திருப்பத்தூருக்கு இரவு 8 மணி வரையும், குடியாத்தத்துக்கு இரவு 9 மணி வரையும் பேருந்துகள் இயக்கப்படும்.

வேலூரில் இருந்து திருச்சி, கும்பகோணம் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் மதியம் 2.30 மணி வரை மட்டுமே இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படாது.

பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதைக் கண்காணிக்க பேருந்து நிலையங்கள், முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலா்கள், பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தவிர, அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் பயணிகளுக்கு தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் உடல் வெப்ப நிலையை அறிந்திடவும், கைகளை சுத்தம் செய்திட கிருமி நாசினி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT