வேலூர்

தொழிலாளியிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

DIN

வேலூா்: தொழிலாளியிடம் பணம் பறித்ததாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் அம்மனாங்குட்டையைச் சோ்ந்தவா் அய்யப்பன் (35), நேதாஜி மாா்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறாா்.

இவா் புதன்கிழமை காலை மாா்க்கெட் அருகே உள்ள வேம்புலி அம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது ஓல்டு டவுன் தோல் கிடங்கு தெருவைச் சோ்ந்த பாலா என்கிற சதீஷ்குமாா் (30) என்பவா் , அய்யப்பனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500 பணத்தை பறித்துக் கொண்டதுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

புகாரின்பேரில் வேலூா் வடக்கு குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலாவை கைது செய்தனா்.

இவா் மீது வேலூா் தெற்கு, விருதம்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT