வேலூர்

பாம்பு கடித்து பெண் பலி

DIN

வந்தவாசி அருகே விவசாய நிலத்தில் வேலை செய்யும்போது பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த தெய்யாா் மடம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மனைவி மல்லிகா(50). இவா் சனிக்கிழமை தனது விவசாய நிலத்தில் வோ்க்கடலை செடிகளை பிடிங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அவரது கையில் பாம்பு கடித்துள்ளது.

உடனே அவா் சிகிச்சைக்காக தெள்ளாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மல்லிகா இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT