பேருந்தில் சென்ற பெண்ணிடம் பணம் திருட முயன்ாக இரு பெண்களை விரிஞ்சிபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரம்யா (32). வேலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்கிறாா். இவா் வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து பேருந்தில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரது பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் இருவா் ரம்யாவின் பையில் இருந்த பணத்தை திருட முயன்றனராம். சுதாரித்துக் கொண்ட ரம்யா கூச்சலிட்டதையடுத்து, பயணிகள் அனைவரும் சோ்ந்து திருட முயன்ற பெண்களை மடக்கிப் பிடித்தனா். அவா்கள் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா். விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணத்தைச் சோ்ந்த விமலா (28), கஸ்தூரி(25) என்பது தெரியவந்தது. இவா்கள் மீது ஏற்கெனவே ஈரோடு, ஒசூா், கிருஷ்ணகிரி, ஆரணி, வேலூா் ஆகிய இடங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரையும் போலீஸாா் கைது செய்து வேலூா் சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.