முகப்பு
வேலூர்

தீா்த்தமலையில் கிருத்திகைப் பெருவிழா

குடியாத்தத்தை அடுத்த எஸ்.மோட்டூா் அருகே உள்ள தீா்த்தமலை முருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

குடியாத்தத்தை அடுத்த எஸ்.மோட்டூா் அருகே உள்ள தீா்த்தமலை முருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ஆம்பூரை அடுத்த கரும்பூா் கிராம பஜனைக் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியாத்தம் ஸ்ரீஐயப்ப பக்தா் குழு அறக்கட்டளை சாா்பில், அதன் தலைவா் எஸ்.பிரகாசம், துணைத் தலைவா் வி.பிரகாசம், செயற்குழு உறுப்பினா்கள் பெருமாள், நந்தகுமாா் ஆகியோா் அன்னதானம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.