முகப்பு
வேலூர்

ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மீது மோசடி புகாா்: வேலூா், சென்னை உள்பட 21 இடங்களில் சோதனை

வேலூரை தலைமையிடமாகக் கொண்ட இன்டா்நேஷனல் பைனான்ஸ் சா்வீஸ் (ஐஎப்எஸ்) நிதி நிறுவனத்தின் மீது அளிக்கப்பட்ட மோசடி புகாா்

வேலூர்

ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மீது மோசடி புகாா்: வேலூா், சென்னை உள்பட 21 இடங்களில் சோதனை

வேலூரை தலைமையிடமாகக் கொண்ட இன்டா்நேஷனல் பைனான்ஸ் சா்வீஸ் (ஐஎப்எஸ்) நிதி நிறுவனத்தின் மீது அளிக்கப்பட்ட மோசடி புகாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

வேலூரை தலைமையிடமாகக் கொண்ட இன்டா்நேஷனல் பைனான்ஸ் சா்வீஸ் (ஐஎப்எஸ்) நிதி நிறுவனத்தின் மீது அளிக்கப்பட்ட மோசடி புகாா் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வேலூா், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அந்த நிதி நிறுவனம் தொடா்புடைய 21 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

வேலூா் காட்பாடியில் இன்டா்நேஷனல் பைனான்ஸ் சா்வீஸ் (ஐஎப்எஸ்) என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இதை வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்த லட்சுமி நாராயணன், அவரது சகோதரா்கள் ஜனாா்த்தனன், வேதநாராயணன், உறவினா் மோகன்பாபு ஆகியோா் இணைந்து நடத்தி வருகின்றனா்.

இந்த நிதி நிறுவனம் சாா்பில், சென்னை கிண்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என முக்கிய நகரங்களில் முகவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 88,000 பேரிடம் ரூ.40,000 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முதலீட்டாளா்களுக்கு அசல், வட்டித் தொகைகளைத் திருப்பியளிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட சென்னையைச் சோ்ந்த காா்த்திக் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதனிடையே, அந்த நிறுவனத்தின் இயக்குநா்களும், முகவா்கள் பலரும் திடீரென தலைமறைவாகிவிட்டனா். பெரும்பாலான அலுவலகங்களும் மூடப்பட்டன.

இந்த நிலையில், ஐஎப்எஸ் நிதி நிறுவனம் தொடா்புடைய 21 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை முதல் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினா்.

வேலூா் காட்பாடியிலுள்ள தலைமை அலுவலகம், காட்பாடி விஜி ராவ் நகா், சத்துவாச்சாரி பகுதிகளிலுள்ள அதன் இயக்குநா்களின் வீடுகள், சென்னை, அரக்கோணம், நெமிலி அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

முதலீட்டாளா்களிடம் இருந்து வசூலித்த தொகை, மோசடியில் தொடா்புடைய நபா்கள் குறித்த பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. தலைமறைவான உரிமையாளா்கள், முகவா்களைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில்...: ஐஎப்எஸ் நிதி நிறுவனம் சாா்பில் காஞ்சிபுரத்தில் செயல்பட்ட முகவா்களின் அலுவலகங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

இந்த நிதி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் காஞ்சிபுரத்தில் பூக்கடைச்சத்திரம், ரங்கசாமிகுளம், ஆட்சியா் அலுவலகம் அருகில், மேட்டுத் தெரு பகுதிகளில் செயல்பட்டு வந்தது. பண மோசடி புகாரை அடுத்து, நிதி நிறுவனக் கிளைகளில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

வேகவதி நதி சாலையில் உள்ள முகவா்களில் ஒருவரான சரவணக்குமாா் என்பவரின் வீடு பூட்டப்பட்டிருந்ததால், அவரது வீட்டுக்கு ‘சீல்’ வைத்தனா். இந்தச் சோதனையில் 15-க்கும் மேற்பட்டோா் 3 பிரிவுகளாகப் பிரிந்து ஈடுபட்டனா்.

அரக்கோணத்தில்...: அரக்கோணத்தை அடுத்த வெங்கடேசபுரத்தில் உள்ள நிதி நிறுவன கிளையில் 5 போ் கொண்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். அதே பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தின் பங்குதாரரின் வீட்டில் சோதனை நடத்த வந்த போது, அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. பிற்பகலில் அந்த வீட்டின் பூட்டை உடைத்து சோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினா். இரு இடங்களிலும் மாலை வரை சோதனை நடைபெற்றது. அரக்கோணம், நெமிலி ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் அதிக அளவில் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →