முகப்பு
வேலூர்

அம்மா உணவகத்தில் நகராட்சி ஆணையா் ஆய்வு

போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை நகராட்சி ஆணையா் சுபாஷினி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை நகராட்சி ஆணையா் சுபாஷினி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள் சுகாதாரமாகவும், தரமாகவும் உள்ளதா என ஆய்வு செய்தாா். விசாரணையில், அங்கு பணிபுரியும் 12 பணியாளா்களில் 7 போ் மட்டுமே பணிக்கு வந்திருந்தது தெரியவந்தது. பணிக்கு வராத 5 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து, போ்ணாம்பட்டு நகரம், வீ.கோட்டா சாலை, பஜாா் தெரு, ஆம்பூா் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், தேநீா்க் கடைகள், தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.

சில கடைகளில் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தாா். நகராட்சி துப்புரவு ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.