சொத்தை ஏமாற்றி பெற்றதாக மகன் மீது மூதாட்டி புகாா்
தனது மகன் ஏமாற்றி பெற்ற சொத்துகளை மீட்டுத் தர வேண்டும் என்று மூதாட்டி 3 மகள்களுடன் வேலூா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாா் அளித்தாா்.
வேலூர்சொத்தை ஏமாற்றி பெற்றதாக மகன் மீது மூதாட்டி புகாா்
தனது மகன் ஏமாற்றி பெற்ற சொத்துகளை மீட்டுத் தர வேண்டும் என்று மூதாட்டி 3 மகள்களுடன் வேலூா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாா் அளித்தாா்.
தனது மகன் ஏமாற்றி பெற்ற சொத்துகளை மீட்டுத் தர வேண்டும் என்று மூதாட்டி 3 மகள்களுடன் வேலூா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாா் அளித்தாா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த சரக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி அமராவதி (84). இவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள். நடராஜன் ஏற்கெனவே இறந்துவிட்டாா்.
இந்த நிலையில், அமராவதியின் மகன் ரவி, தந்தை பெயரில் உள்ள சொத்துகளை 3 சகோதரிகளின் பெயருக்கு மாற்றித் தர ஏற்பாடு செய்வதாகக் கூறி, தாய் அமராவதியையும், 3 சகோதரிகளையும் அழைத்துள்ளாா். அதை நம்பி வந்த 3 சகோதரிகள், தாய் அமராவதி ஆகியோரிடம் சில ஆவணங்களில் கையொப்பம் பெற்றாராம்.
பின்னா், தந்தையின் சொத்துகள் அனைத்தையும் ரவி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த தாய் அமராவதி, தனது 3 மகள்களுடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து புகாா் அளித்தாா்.
பின்னா், அவா்கள் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தியிடம் மனு அளித்தனா். அதில், எனது மகன் ரவி சொத்துகளை ஏமாற்றி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டாா். அவா் மீது மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகன் தனது பெயருக்கு எழுதிக் கொண்ட பத்திரப் பதிவை ரத்து செய்து சொத்துகளை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.