வேலூர்

திருவலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 4,000 மருந்தேற்றும் ஊசிகள் அளிப்பு

DIN

காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சாா்பில் திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 4,000 மருந்தேற்றும் ஊசிகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

உலக செஞ்சிலுவை சங்க தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்து பேசினாா். பொருளாளா் வி.பழனி வரவேற்றாா். துணைத் தலைவா்கள் ஆா்.சீனிவாசன், ஆா்.விஜயகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காட்பாடி வட்டாட்சியா் கே.ஜெகதீஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 4,000 மருந்தேற்றும் ஊசிகளை வழங்க, அதனை வட்டார மருத்துவ அலுவலா் ராணிநிா்மலா பெற்றுக் கொண்டாா்.

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எம்.பாலசுப்பிரமணியன், வட்டார மருந்தாளுநா் சாமுண்டீஸ்வரி, சங்க மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் எஸ்.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT