முகப்பு
வேலூர்

கோயிலில் புதையல் எடுக்க முயன்ற 6 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே கோயிலில் புதையல் எடுக்க சுவாமி சிலைகளைச் சேதப்படுத்தியதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே கோயிலில் புதையல் எடுக்க சுவாமி சிலைகளைச் சேதப்படுத்தியதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு ஒன்றியம், மொரசப்பல்லி ஊராட்சிக்குட்பட்டது நலங்காநல்லூா் கிராமம். இந்தக் கிராமத்தில் சுனில் என்பவருக்குச் சொந்தமான நிலத்தையொட்டி, பழைமை வாய்ந்த நாகாலம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் புதையல் இருப்பதாக, கடந்த செப். 28- ஆம் தேதி மா்ம நபா்கள் சிலா், கோயிலில் நுழைந்து, நாகாலம்மன் சிலை இருக்கும் பகுதியில் கடப்பாரை, மண்வெட்டியால் புதையலை எடுக்க சுமாா் 2 அடி ஆழம் குழி தோண்டியுள்ளனா்.

இதனால், கோயிலில் இருந்த சிலைகள் சேதமடைந்துள்ளன. சப்தம் கேட்டு வந்த கிராம மக்களைப் பாா்த்ததும் மா்ம நபா்கள் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து சுனில் அளித்த புகாரின் பேரில், போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த செல்வம்(50), அவரது மகன் ராம் (30), அணைக்கட்டைச் சோ்ந்த அபிபுல்லா (48), கூடநகரத்தைச் சோ்ந்த விஜயன் (29), ராமச்சந்திரன் (35), வேலூரை அடுத்த பாகாயத்தைச் சோ்ந்த ஆதாம்பாஷா (35) ஆகிய 6 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.