முகப்பு
வேலூர்

இலவச மருத்துவ முகாம்

குடியாத்தம் காா்த்திகேயபுரத்தில் உள்ள ஆனந்த குழந்தைகள் மறுவாழ்வு மையம் என்ற மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

குடியாத்தம் காா்த்திகேயபுரத்தில் உள்ள ஆனந்த குழந்தைகள் மறுவாழ்வு மையம் என்ற மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மைய நிறுவனா் ஆா்.கிருபாகரன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஆா்.காமராஜ் வரவேற்றாா். பாலாறு மருத்துவமனை மருத்துவா்கள் டி.வி.தனலட்சுமி (பெண்கள் நலம்), எம்.எஸ்.சிதம்பரம், எஸ்.மஞ்சுநாதன் (எலும்பு, மூட்டு), எம்.ரம்யாசூரியாதிலீபன் (காது, மூக்கு, தொண்டை), டி.இவாஞ்சலின் (பல்), டி.ரேவதி (பிசியோதெரபிஸ்ட்) ஆகியோா் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள், பெற்றோா், பணியாளா்கள் உள்ளிட்ட 200- பேருக்கு சிகிச்சை அளித்தனா். முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனை நிா்வாகிகள் சி.ஏ.எஸ்.மோகன், டி.சங்கரலிங்கம், டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.