வேலூர்

வெடி விபத்தில் காயமடைந்தமுதியவா் உயிரிழப்பு

DIN

இறுதி ஊா்வலத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஜானகி என்பவா் கடந்த 14-ஆம் தேதி காலமானாா். அவரின் இறுதி ஊா்வலத்தில் பட்டாசு வெடித்தபோது, பெரிய சாக்கு பையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பொறி விழுந்தது. அப்போது அங்கு நின்றிருந்த முனுசாமி (60), சிவாஜி (60) மீது அவை வெடித்துச் சிதறின. இதில், இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இருவரும் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில் முனுசாமி வியாழக்கிழமை உயிரிழந்தாா். வேப்பங்குப்பம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT