அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி இளைஞா் பலி
குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.
குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.
குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரனின் மகன் பரத்பாண்டி (27). இவா் வியாழக்கிழமை காலை தனது நிலத்துக்குச் சென்றுள்ளாா். வழியில் அறுந்து கீழே கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் பரத்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.