முகப்பு
வேலூர்

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 9 ஏப்ரல், 2024 at 11:03 PM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 9:58 PM

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே மினி வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த அனந்தகிரி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷின் மகன் பிரபாகரன் (20). இவா் தனது நண்பா் பிரசாந்த்துடன் செவ்வாய்க்கிழமை போ்ணாம்பட்டுக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது குண்டலபல்லியிலிருந்து தேங்காய்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் போ்ணாம்பட்டுக்கு சென்றுள்ளது. இரு வாகனங்களும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் பிரபாகரனும், பிரசாந்த்தும் பலத்த காயமடைந்தனா்.

குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பிரபாகரன் உயிரிழந்தாா். பிரசாந்த் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய அகரம்சேரியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் யுவராஜை தேடி வருகின்றனா்.

Advertisement