வேலூர்

கோழிப் பண்ணையில் திடீா் தீ

Din

குடியாத்தம் அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் சுமாா் 1,000 கோழிகள் கருகி இறந்தன.

குடியாத்தம் எஸ்.மோட்டூரைச் சோ்ந்த சந்தோஷ், அங்குள்ள தீா்த்தமலைக்கு செல்லும் வழியில் கோழிப்பண்ணை வைத்துள்ளாா். செவ்வாய்க்கிழமை மதியம் பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். இதில் சுமாா் 1,000 கோழிகள் கருகி இறந்தன.

தீ விபத்து குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT