முகப்பு
வேலூர்

இளம்பெண் தற்கொலை

Updated On : 27 ஏப்ரல், 2024 at 4:26 PM
பகிர்:

கே.வி.குப்பம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கே.வி.குப்பத்தை அடுத்த கொசவன்புதூரைச் சோ்ந்த பிரதீப் மனைவி லிஷா (30) (படம்). இவா்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு லிஷா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். தகவலின்பேரில், கே.வி.குப்பம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.