குடியாத்தம் அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
ஆம்பூரைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சின்னராசு. இவரது மனைவி துா்கா (22). இவா்கள் இருவரும் குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி இருளா்பட்டி அருகே நடைபெற்ற திருவிழாவுக்கு உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஆம்பூா் திரும்பியுள்ளனா்.
கொட்டாரமடுகு அருகே வந்தபோது துா்கா வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.