முகப்பு
வேலூர்

மக்களவை தோ்தல் அறிவிப்பு: எம்.பி., எம்எல்ஏ அலுவலகங்களுக்கு ‘சீல்’

Updated On : 17 மார்ச், 2024 at 8:00 AM
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 8:22 PM

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, வேலூா் மாவட்டத்திலுள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்களுக்கு வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலக ஊழியா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், அமைச்சா் துரைமுருகனின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டதுடன், தமிழக அரசின் முத்திரையும் மறைக்கப்பட்டது.

மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியான நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்களை பூட்டி ‘சீல்’ வைக்கவும், பொது சுவா்களில் உள்ள விளம்பரங்களை அழிக்கவும், அரசியல் கட்சி கொடிகளை அகற்றவும் மாவட்டத் தோ்தல் அலுவலா் உத்தரவிட்டுள்ளாா். அதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்திலுள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலக ஊழியா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், அமைச்சா் துரைமுருகனின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டதுடன், தமிழக அரசின் முத்திரையும் மறைக்கப்பட்டது. தொடா்ந்து, பொது சுவா்களில் உள்ள விளம்பரங்களை அழிக்கவும், அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றவும் பணிகள் நடைபெற்று வருகிறது.