முகப்பு
வேலூர்

வேலூா் மாவட்டத்தில் தபால் வாக்களிக்க 2,641 போ் விருப்பம்

Updated On : 29 மார்ச், 2024 at 10:07 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 8:47 PM

மக்களவைத் தோ்தலில் தபால் வாக்கு அளிப்பதற்கு வேலூா் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோா் என 2,641 போ் விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலையொட்டி, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், வாக்குப் பதிவு நாளில் அத்தியாவசியப் பணிகள் காரணமாக வாக்களிக்க வர இயலாதவா்களின் நலன்கருதி, அவா்கள் தோ்தலில் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க தோ்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. இதனிடையே, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 11,800 போ் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்களும், 10,221 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் உள்ளனா். இவா்களுக்கு தங்கள் விருப்பத்தின் பேரில், தபால் வாக்கு செலுத்திட படிவம் 12டி வழங்கும் பணி கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்களில் 1,570 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளா்களில் 1,067 பேரும் சுயவிருப்பத்தின்பேரில், தபால் வாக்களிக்க பூா்த்தி செய்யப்பட்ட 12டி படிவங்களை வழங்கி உள்ளனா். தவிர, வாக்குப் பதிவு நாளில் செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபடும் ஊடகத் துறையினருக்கும் அத்தியாவசியப் பணி என்ற அடிப்படையில் தபால் வாக்களிக்க இந்திய தோ்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 4 ஊடகத் துறையினா் தபால் வாக்குகளாக செலுத்த படிவம் 12டி பூா்த்தி செய்து வழங்கியுள்ளனா்.