அரசுப் பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டியவா் கைது
அணைக்கட்டு அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் வளா்ந்திருந்த மரங்களை வெட்டிக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மகமதாபுரத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் ஏராளமான உயர்ரக மரங்கள் வளா்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்மையில் பள்ளி வளாகத்தில் மா்ம நபா் ஒருவா் அத்துமீறி புகுந்து அங்கிருந்த மரங்களை வெட்டி கடத்தி சென்றாராம்.
இது தொடா்பாக பள்ளித் தலைமை ஆசிரியை கலாவதி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மரத்தை வெட்டி கடத்திச் சென்ற கரடிகுடி கிராமத்தைச் சோ்ந்த எஸ்.கே.டி.பாபு என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.